2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இதயத்தை திருடாதே தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. புதுப்புது நிகழ்ச்சிகளையும், மெகா தொடர்களையும் வெளியிட்டு சின்னத்திரை ரசிகர்களை மெதுவாக தன் பக்கம் கவர்ந்து வருகிறது கலர்ஸ் தமிழ் டிவி. இந்நிலையில் அந்த தொலைக்காட்சியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "இதயத்தை திருடாதே" என்ற சீரியலின் இரண்டாம் பாகத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
முதல் சீசனில் கதாநாயகன் சிவா ஜெயிலுக்கு செல்வது போல் முடிக்கப்பட்டிருக்கும். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தின் கதைக்களம் 6 வருடம் கழித்து நடைபெறுவது போல் காட்டப்பட்டுள்ளது. கதையில் சிவா பெரிய டான் ஆகி விடுகிறார். நாயகி சஹானாவுக்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை உள்ளது. சஹானா மிகப்பெரிய தொழிலதிபர் ஆகிறார். சஹானா தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு அவளது தந்தையை பற்றி எதுவுமே கூறாமல் வளர்க்கிறார்.
சிவா பெரிய டான் ஆனது எப்படி?. தன் தாயை மீறி தந்தையைப் பற்றி தெரிந்து கொள்வாரா ஐஸ்வர்யா? இவர்கள் மூவரும் திரும்பவும் சேர்வார்களா? என்ற கேள்விகளுடன் இதயத்தை திருடாதே சீசன் 2 கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் ஹிட்டான ஒரு சீரியலுக்கு பெரும்பாலும் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது கடினம். அப்படியே ஒரு சில சீரியல்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை பார்வையாளர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. எனவே, தற்போது வெளியாகவுள்ள இதயத்தை திருடாதே சீசன் 2 ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுமா?