இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு |
ரசிகர்களின் பேராதரவை பெற்ற "யாரடி நீ மோகினி" மெகாதொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தொடரின் கிளைமாக்ஸை முடிவு செய்யும் பொறுப்பை ரசிகர்களிடமே விட்டு விட்டது தயாரிப்பு குழு.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்களில் ஒன்று "யாரடி நீ மோகினி". பேய் கதாபாத்திரத்தை நுழைத்து அதே சமயம் குடும்பத்தொடராகவும் ரசிக்க வைக்கும் வகையில் இதன் கதை அமைப்பு இருந்ததே இந்த தொடரின் வெற்றிக்கு காரணம் என கூறலாம். அன்மையில் 1200-வது எபிசோடை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரின் கிளைமாக்ஸ் எப்படி இருக்க போகிறது? என ரசிகர்கள் ஒருபுறம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க, கிளைமாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை ரசிகர்களே முடிவு செய்யட்டும் என சீரியலின் தயாரிப்புக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளிவந்த புரோமோவில், ரசிகர்களுக்கு மூன்று ஆப்ஷன்களை கொடுத்துள்ளது. சீரியலின் வில்லி கதாபாத்திரமான ஸ்வேதா மன்னித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? அல்லது வெண்ணிலாவால் பழிவாங்கப்பட வேண்டுமா? அல்லது சித்ராவின் ஆவியினால் பழிவாங்கப்பட வேண்டுமா? என மூன்று ஆப்ஷன்களை ஆடியன்ஸூக்கு கொடுத்துள்ளது.
இதில் அதிகமாக ஓட்டு வாங்கும் கிளைமாக்ஸை படமாக்கி ஒளிபரப்ப சீரியல் தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே கிளைமாக்ஸை ரசிகர்களிடம் கொடுக்கும் முதல் சீரியல் குழு "யாரடி நீ மோகினி" குழு தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் ஆதரவை பெற்ற சீரியல் விரைவில் முடிய போவதை நினைத்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இருந்தாலும் இந்த புதிய முயற்சியில் ரசிகர்களின் கிளைமாக்ஸ் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போமே.