அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தனது போட்டோ ஷூட்டில் நடந்த காமெடியான சம்பவம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக் குமார், நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் படு பிஸியாக நடிக்கும் இவர், மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டுக்காக இவர் செய்த காரியம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஜனனி நடத்திய அந்த போட்டோ ஷூட்டில், ஹீல்ஸ் அணிந்து கொண்டு சுவர் மீது ஏறி போஸ் கொடுக்க முயற்சிக்கிறார். அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் தவறி விழப்போக நல்லவேளையாக போட்டோகிராபர் பிடித்துக் கொள்கிறார். இந்த நகைச்சுவையான சம்பவத்தை வடிவேலு வாய்ஸூடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த சிலர் "தலைகீழாக தான் குதிக்கப் போகிறேன்", "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்" என காமெடியன்களின் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டு கலாய்த்துள்ளனர். ஜனனி இந்த கிண்டல்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக எடுத்துக் கொள்கிறார்.
ஒரு போட்டோவுக்காக இவ்வளவு அக்கப்போரா மேடம்?