துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா. ரித்திகா, சில தொடர்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்த போதிலும், பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலாவுடன் அவர் அடித்த ரைமிங் வசனங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தனக்கான ரசிகர்களை கண்டுகொண்டார்.
தற்போது பாக்கியலெட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா, அந்த தொடரில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரித்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பாக்கியலெட்சுமி தொடரில் தொடக்கத்தில் ரித்திகாவுக்கு குறைவான காட்சிகளே இருந்தது. ஆனால், தற்போது விஜே விஷால் - ரித்திகா ஜோடி சிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.