தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் ஆதரவோடு 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது 8வது சீசனும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீ ராம், எஸ்.பி.சரண் மற்றும் பென்னி தயால் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த முடிந்த எபிசோடில் ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.
ஸ்ரீதர் சேனாவின் வெளியேற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நடுவர்களை கடுமையாக குற்றம் சாட்டி பதிவிட்டு வருகின்றனர். இதனால் மனமுடைந்த நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அத்தனை வெறுப்பைக் கக்கும் செய்திகளைத் தாங்க முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.