தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் ஆதரவோடு 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது 8வது சீசனும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீ ராம், எஸ்.பி.சரண் மற்றும் பென்னி தயால் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த முடிந்த எபிசோடில் ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.
ஸ்ரீதர் சேனாவின் வெளியேற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நடுவர்களை கடுமையாக குற்றம் சாட்டி பதிவிட்டு வருகின்றனர். இதனால் மனமுடைந்த நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அத்தனை வெறுப்பைக் கக்கும் செய்திகளைத் தாங்க முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.