23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-ல் முக்கிய ஜோடியாக வலம் வந்த மணிகண்டன் சோபியா தம்பதியினர் நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிசஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக வலம் வந்தவர்கள் சோபியா - மணிகண்டன் ஜோடி. இந்நிலையில் அவர்கள் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியானது. நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து பேசிய சோபியா, “தாமதமாக பதிலளிப்பதற்காக மன்னனித்து விடுங்கல். நாங்கள் ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 3ல் பங்கேற்கவில்லை என அதிகம் அன்புடன் மெசேஜ்கள் வந்தன. எனக்கு சில மெடிக்கல் பிரச்சனைகள் வந்ததால் மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க அட்வைஸ் செய்தார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் வெளியேறினோம். கண்டிப்பாக வைல்டு கார்டு ரவுண்டில் நாங்கள் வருவோம்.” என கூறியுள்ளார்.
சோபியா - மணிகண்டன் நிகழ்ச்சியிலிருந்து விலகியது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும், சோபியாவின் விளக்கம் அவரது ரசிகர்களை வைல்டு கார்டு ரவுண்டிற்காக காத்திருக்க வைத்துள்ளது.