தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

யாரடி நீ மோகினி சீரியலின் 2-வது க்ளைமாக்ஸை வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பபோவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஹிட் அடித்த யாரடி நீ மோகினி சீரியல் சமீபத்தில் நிறைவுற்றது. மிகவும் வித்தியாசமான முயற்சியாக தொடரின் க்ளைமாக்ஸை ரசிகரக்ளிடம் ஒப்படைத்திருந்த சீரியல் குழு சென்ற வார ஞாயிறு அன்று க்ளைமாக்ஸை ஒளிபரப்பியது. சீரியல் முடிவடைந்ததையொட்டி அதில் நடித்த நடிகர்களும் மிகவும் எமோஷ்னலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வந்தனர்.
இந்நிலையில், யாரடி நீ மோகினி சீரியலுக்கு மற்றொரு க்ளைமாக்ஸ் வைத்திருப்பதாக சீரியல் குழு அறிவித்து புரோமோ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ஒரே சீரியலுக்கு இரண்டு க்ளைமாக்ஸ் வைத்திருப்பது இதுவே முதல் முறை என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
யாரடி நீ மோகினி சீரியலின் இரண்டாவது க்ளைமாக்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.