இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவி பிரபலமான ரீமா அசோக் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரையில் தோன்றவுள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையின் கவர்ச்சி புயலாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கிறங்கடித்தவர் ரீமா அசோக். விஜய் டிவியின் களத்துமேடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, றெக்கை கட்டி பறக்குது மனசு, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் விஜய் டிவியின் டான்ஸ் ஷோவான 'ஜோடி பன் அன்லிமிடெட்' என்ற நிகழ்ச்சியில் ராமருக்கு ஜோடியாக அசத்தலான ஆட்டம் போட்டார்.
இப்படி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து, மகிழ்வித்து வந்த ரீமா திடீரென சில நாட்கள் காணாமல் போய்விட்டார். தற்போது அவர் மீண்டும் திரையில் தோன்றவுள்ள செய்தியை தனது ரசிகர்களுக்கு இண்ஸ்டா பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். 'ஷூட்டிங் தொடங்கியது' என சிம்பிளாக தனது அடுத்த ப்ராஜெக்ட் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். ஆனால், அவர் சின்னத்திரையில் எந்த சீரியலில் அல்லது நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்ற தகவல் சஸ்பென்ஸாக வைத்துள்ளார். ரீமா மீண்டும் நடிக்க இருப்பதை தெரிந்து கொண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.