தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் போட்டியாளரான அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா தங்களது விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கி மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகரான அபிஷேக் தனது அம்மா பற்றி நினைவு கூறும் போது அவரது விவாகரத்து குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில் அபிஷேக் தேவையில்லாமல் பழைய விஷயங்களை கிளறுவதாக அவரது முன்னாள் மனைவி தீபா நடராஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'அபிஷேக்கை விவாகரத்து செய்தது என் தனிப்பட்ட விருப்பம். அதற்கான விளைவுகளை நான் சந்தித்து வருகிறேன். சிலர் பழைய விஷயங்களை கிளறுவது நம்முடைய ஒருநாள் அல்லது வாரத்தையே வீணாக்குகிறது' என அதில் கூறியிருந்தார். மேலும் மற்றொரு பதிவில், 'திருமணமான புதிதில் அபிஷேக்குடன் சேர்ந்து பேட்டியளித்திருந்தேன். ஆனால், விவாகரத்திற்கு பிறகு தான் அது ட்ரெண்டாகிறது. அதை நீக்கும்படி மீடியாவிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் செய்யவில்லை' எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.