படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பிக்பாஸ் போட்டியாளரான அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா தங்களது விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கி மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகரான அபிஷேக் தனது அம்மா பற்றி நினைவு கூறும் போது அவரது விவாகரத்து குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில் அபிஷேக் தேவையில்லாமல் பழைய விஷயங்களை கிளறுவதாக அவரது முன்னாள் மனைவி தீபா நடராஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'அபிஷேக்கை விவாகரத்து செய்தது என் தனிப்பட்ட விருப்பம். அதற்கான விளைவுகளை நான் சந்தித்து வருகிறேன். சிலர் பழைய விஷயங்களை கிளறுவது நம்முடைய ஒருநாள் அல்லது வாரத்தையே வீணாக்குகிறது' என அதில் கூறியிருந்தார். மேலும் மற்றொரு பதிவில், 'திருமணமான புதிதில் அபிஷேக்குடன் சேர்ந்து பேட்டியளித்திருந்தேன். ஆனால், விவாகரத்திற்கு பிறகு தான் அது ட்ரெண்டாகிறது. அதை நீக்கும்படி மீடியாவிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் செய்யவில்லை' எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.