இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரையில் தொடர்களை விட ரியாலிட்டி ஷோக்கள் தான் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் எல்லா சேனல்களும் விதவிதமான ஷோக்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நாளை(அக்., 10) முதல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது கலாட்டா ராணி நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்கிற வேடிக்கை, காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு 3 சுற்றுகளாக விதவிதமான போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்கள் கலாட்டா ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை வெல்வார்கள். இந்த நிகழ்ச்சியை ஆதவன் மற்றும் ஜெயச்சந்திரன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல்12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.