சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் அதிரடி சோதனையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் ஆர்யன் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுளார்.
சிறையில் இருக்கும் மகனின் கை செலவுக்காக ஷாருக்கான் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளார். சிறை விதிமுறைகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை மட்டும் அனுமதிக்கும் என்பதால் இந்த தொகையை அனுப்பி உள்ளார். இந்த தகவலை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து அவர் சிறை கேண்டீனில் உணவு பொருள் வாங்கி சாப்பிடலாம், துணிகளை சலவை செய்ய கொடுக்கலாம். சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.