தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போதிருந்தே துவங்கிவிட்டன. இந்த நிலையில் மும்பை சென்ற இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது நடித்து வரும் படப்பிடிப்பு தளத்திற்கு நேரிலேயே சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பாலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படும்போது, இந்தியாவில் நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருக்கின்ற இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கானை நேரில் வந்து சந்தித்து இருப்பதை பார்க்கும்போது அவர்கள் இருவரும் அடுத்த படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்பது போன்றுதான் தோற்றம் ஏற்படும். ஆனால் உண்மை அதுவல்ல. ராஜமவுலியின் படம் பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதால், பாலிவுட் ரிலீஸின்போது புரோமோஷன் விஷயத்திலும் படத்தை ரிலீஸ் செய்வதிலும் அவரது உதவியை நாடி வந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது என்று கூறுகிறார்கள், விரைவில் இது குறித்த தகவல் ஏதாவது வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.