அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? |
இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ‛இந்திய திரைப்பட ஆளுமை' விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2021ம் ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது பெறுபவர்களின் பெயர்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கடந்த 18-ம் தேதி அறிவித்தார். அதில், பிரபல பாலிவுட் நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் பிரபல பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், கோவாவில் 52வது சர்வதேச திரைப்பட விழா இன்று (நவ.,21) துவங்கியது. இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இதன் துவக்க விழாவில் நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகிய இருவருக்கும் ‛இந்திய திரைப்பட ஆளுமை விருது' வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இயக்குனர் கரண் ஜோகர், நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.