குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா, 89 உடல்நலக் குறைவால் நவ., 24ல் காலமானார். அவருக்கு பாலிவுட் திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். அவர் மறைந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் அவரது மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட உருக்கமான பதிவு வைரலானது.
ஹேமமாலினி வெளியிட்ட பதிவில், ‛‛தரம்ஜீ(தர்மேந்திரா), அன்பான கணவர், இரு பெண்களின்( இஷா, அஹானா) அப்பா, நண்பர், ஞானி, வழிகாட்டி, கவிஞர் என எனக்கு எல்லாமுமாக நீங்கள் இருந்தீர்கள். தன் எளிமையான, நட்பு ரீதியான பழக்க வழக்கங்களால் என் குடும்பத்தின் அனைவரையும் கவர்ந்தவர். எல்லோரிடமும் பாசமும் ஆர்வமும் காட்டியவர்.
பிரபலமாக இருந்தபோதிலும் மக்கள் மத்தியில் அவரது திறமையும், பணிவு, எல்லோரையும் சென்றடையும் ஈர்ப்பு ஆகியவை அவரை எல்லா நாயகர்களிலும் தனித்து நிற்கும் ஒப்பற்ற சின்னமாக ஆக்கின. திரைத்துறையில் அவரது நிலையான புகழும் சாதனைகளும் என்றென்றும் நீடிக்கும்.
எனது தனிப்பட்ட இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடம் என் வாழ்நாள் முழுவதும் நிரப்பப்பட மாட்டாத ஒன்று . பல ஆண்டு இணைந்த வாழ்வுக்குப் பிறகு, எண்ணற்ற நினைவுகள் மட்டுமே மீதமிருக்கின்றன. அந்த அத்தனை சிறப்பான தருணங்களையும் மீண்டும் மீண்டும் வாழ்வதற்காக…'' என உருக்கமாக குறிப்பிட்டு, அவருடன் இருந்த போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.