தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
5 முறை தேசிய விருது பெற்ற நடிகை ஷபானா ஆஸ்மி. 1974 முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்: கோவிட் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனது நெருங்கி நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் பரிசோனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பதிவுடன் அவர் தனது கணவர் ஜாவீத் அக்தருடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார் இதனை குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர் "எனது நண்பர் ஜாவீத்திடமிருந்து விலகி இருங்கள்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் ஷபானா ஆஸ்மி குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஷபானா ஆஸ்மி தற்போது ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங்குடன் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருகிறார்.