ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பிறந்து வளர்ந்த வீடு தெற்கு டில்லி குல்மோகர் பூங்கா பகுதியில் உள்ளது. அமிதாப் மும்பைக்கு நடிப்பு வாய்ப்பு தேடிச் செல்லும்வரை இங்குதான் வசித்து வந்தார். பல ஆண்டுகள் அமிதாப்பின் தந்தை தேஜி பச்சனும், தாய் ஹரிவன்ஷ்ராய் பச்சனும் இங்கு வாழ்ந்து வந்தனர். பின்னர் அதனை அமிதாப் பூட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரரும், குடும்ப நண்பரும், நெசோன் குழும தலைமை செயல் அதிகாரியுமான அவ்னி பேடருக்கு விற்றுள்ளார். இந்த வீடு 23 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனுக்கு மும்பையில் ஏற்கெனவே 5 பங்களா வீடுகள் உள்ளது. இது தவிர சமீபத்தில் அந்தேரி பகுதியில் 31 கோடி ரூபாய்க்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் டூபிளக்ஸ் வீடு ஒன்றை வாங்கினார். டில்லி பூர்வீக வீட்டை பராமரிக்க முடியாமல் விற்றுள்ளார். இன்னும் கூடுதல் விலைக்கு பலர் கேட்டும் குடும்ப நண்பருக்கு அதனை விற்றுள்ளார்.