தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் ஷாரூக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆர்யன் கான் ஜாமினில் வெளியில் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு அடுத்ததாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோருடன் பதான் என்ற படத்தில் நடிக்கிறார். இதனையும் முடித்துவிட்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விக்கி கவுஷன், டாப்ஸி, பொமான் ஹிரானி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் ஹிரானி இந்தியில் 'முன்னாபாய் எம்பிபிஎஸ்', '3 இடியட்ஸ்', 'பிகே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.




