தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட தாதா சாகேப் பால்கே வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு இயக்குனர்கள் ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி ஆகியோருக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் தாதா சாகேப் பால்கே படம் உருவாகிறது என தகவல் வெளியானது. அதேசமயத்தில் ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா இணைந்து 'தாதா சாகேப் பால்கே' வாழ்க்கையை பின்னணியாக கொண்டு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இந்தக் கதையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியும் வெளியானது.
இதைத்தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி, அமீர்கான் இணைந்து தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை படத்தை அக்டோபரில் துவங்குவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் திரைக்கதை அவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் அமையவில்லையாம். இதனால் இந்த படத்தை கைவிட ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் தற்போது ராஜமவுலிக்கு போட்டியில்லாமல் தாதா சாகேப் பால்கே படத்தை உருவாக்க வாய்ப்பு வந்துள்ளது என்கிறார்கள்.




