துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை கதை களமாக கொண்டு உருவாகியுள்ள படம் தி காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை பிரதமர் முதல் பல தலைவர்கள் பாராட்டி உள்ளார்கள். பல மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளது. 19 கோடியில் தயாரான படம் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஆனால் சில அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ஆமீர்கான் காஷ்மீர் பைல்ஸ் படம் ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருக்கிறார்.
மும்பையில் நடந்த ஆர்ஆர்ஆர் பட அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரும் 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை பார்க்க வேண்டும். மனிதநேயம் உள்ள அனைவர் மனதையும் இந்தப் படம் உணர்ச்சிவசப்பட வைக்கும். கண்டிப்பாக நான் இந்தப் படத்தை பார்ப்பேன். தியேட்டர்களில் காஷ்மீர் பைல்ஸ் வெற்றிகரமாக ஓடுவதை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. என்று பேசினார்.