தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
சமீத்தில் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் உலக புகழ்பெற்ற இசை கலைஞர்கள் நினைவு கூறப்பட்டார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கரை நினைவு கூறாமல் புறக்கணித்தனர். இதனால் இனி வரும் காலங்களில் ஆஸ்கர், கிராமி போன்ற விருது விழாக்களை புறக்கணிக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச விருதுகள் என்று கூறிக் கொண்டு விழா நடத்துகிறவர்கள் அவர்களின் இனம் அல்லது சித்தாந்தங்கள் காரணமாக பழம்பெரும் கலைஞர்களை புறக்கணித்து, வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கிறார்கள். அத்தகைய உள்ளூர் விருதுகளுக்கு எதிராக நாம் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
ஆஸ்கர் மற்றும் கிராமி இரண்டு விருது விழாக்களிலும் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர்ஜிக்கு அஞ்சலி செலுத்த தவறிவிட்டனர். நமது ஊடகங்கள் உலகளாவிய விருதுகள் என்று கூறிக்கொள்ளும் இந்த உள்ளூர் நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு கங்கனா எழுதியுள்ளார்.