தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகிறது. 2025ம் ஆண்டில் வெளியாகும் படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு 2026, மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
2026 ஆஸ்கர் விருதுகளுக்காக சில புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஆஸ்கர் விருது போட்டிக்காக வந்த சில படங்களை 'அகாடமி வாக்காளர்கள்' பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதற்காக, 'அகாடமி வாக்காளர்கள்' வாக்களிப்பதற்கு முன்பாக அவர்கள் பார்த்த அனைத்து படங்களையும் 'பார்த்துவிட்டோம்' என்பதை உறுதி செய்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை அதற்குரிய பிரத்யேக இணையதளத்தில் கண்காணிக்கவும் முடிவெடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாது, 'ஏஐ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களை வரவேற்கும் விதமாகவும் சில வழிகாட்டுதல்களை அகாடமி வெளியிட்டுள்ளது. ஒரு மனிதன் எந்த அளவிற்கு படைப்பாற்றல் மிக்க படைப்பாளியாக இருக்கிறார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அகாடமி கூறியுள்ளது.
கடந்த வருட ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்களான 'தி ப்ரூட்டலிஸ்', மற்றும் 'எமிலியா பெரெஸ்' படங்களை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது குறித்து சர்ச்சை எழுந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.