துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகிறது. 2025ம் ஆண்டில் வெளியாகும் படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு 2026, மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
2026 ஆஸ்கர் விருதுகளுக்காக சில புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஆஸ்கர் விருது போட்டிக்காக வந்த சில படங்களை 'அகாடமி வாக்காளர்கள்' பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதற்காக, 'அகாடமி வாக்காளர்கள்' வாக்களிப்பதற்கு முன்பாக அவர்கள் பார்த்த அனைத்து படங்களையும் 'பார்த்துவிட்டோம்' என்பதை உறுதி செய்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை அதற்குரிய பிரத்யேக இணையதளத்தில் கண்காணிக்கவும் முடிவெடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாது, 'ஏஐ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களை வரவேற்கும் விதமாகவும் சில வழிகாட்டுதல்களை அகாடமி வெளியிட்டுள்ளது. ஒரு மனிதன் எந்த அளவிற்கு படைப்பாற்றல் மிக்க படைப்பாளியாக இருக்கிறார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அகாடமி கூறியுள்ளது.
கடந்த வருட ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்களான 'தி ப்ரூட்டலிஸ்', மற்றும் 'எமிலியா பெரெஸ்' படங்களை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது குறித்து சர்ச்சை எழுந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.