தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். தற்போது முதன்முறையாக சொந்தமாக ஒரு படத்தை தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ‛சுபம்' என பெயரிட்டுள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வரும் மே 9ல் படம் ரிலீஸாகிறது. இதையொட்டி படத்தினை புரொமோஷன் செய்து வருகிறார்.
சமந்தா கூறுகையில், ‛‛எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் எனக்கு வெட்கமாக உள்ளது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என யோசிக்கிறேன். ஆனால் சுபம் படத்தில் நடித்துள்ளவர்களின் நடிப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்'' என்றார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த ‛விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா. அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‛யே மாய சேசாவே' படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தபோது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை சென்று பின்னர் பிரிந்தனர். தனது முதல் படத்தை பற்றி சமந்தா இப்படி பேசியிருப்பது நாகசைதன்யா மீதான வெறுப்பால் என்பது தெளிவாக தெரிகிறது.