தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள திரையுலகில் நடிகைகளிடம், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகில் பணியாற்றும் பலர் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருளை உட்கொண்டுவிட்டு தன்னிடம் படப்பிடிப்பில் உடையை சரி செய்வதற்குரிய உதவி செய்ய வரவா என்று கேட்டு அத்துமீறி நடந்ததாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் பிரபல மலையாள குணச்சித்ர நடிகையான மாலா பார்வதி என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்படி திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதுபற்றி அவர் கூறும்போது, “இப்போது இருக்கும் பெண்கள் பலருக்கும் சின்ன விஷயத்தை கூட பூதாகரமாக்கி பார்க்கும் மனோபாவம் வந்துவிட்டது. ஒரு சிறிய ஜோக்கை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 'நான் உன் ஆடையை சரி செய்ய உதவட்டுமா? உன்னுடன் கூட வரட்டுமா? என்னுடன் உறங்க விருப்பமா?' என்பது போன்ற கேள்விகளை எதிர்கொண்டால் அப்படிப்பட்டவர்களை கெட் லாஸ்ட் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை கவனிக்க போய்விட வேண்டியது தானே. இதை பெரிய பிரச்னையாக்கினால் இந்த திரையுலகில் எப்படி நீடித்து பயணிக்க முடியும். இது போன்ற சிக்கல்களை கையாள பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
தவறு செய்த ஆண்களை தட்டிக்கேட்பதை விட்டுவிட்டு பெண்கள் எப்படி இதை கையாள வேண்டும் என கருத்து கூறிய மாலா பார்வதியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கடலோர கவிதைகள், முதல் மரியாதை' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரஞ்சனி, மாலா பார்வதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் மாலா பார்வதி. நீங்கள் ஒரு சைக்காலஜிஸ்ட் மற்றும் லாயராக இருந்தும் கூட இது போன்ற விஷயங்களை எப்படி ஆதரிக்கிறீர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இதுதான் உங்களுடைய குணத்தையும் காட்டுகிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உங்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை” என்று கூறியுள்ளார் ரஞ்சனி.