அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
புதுடில்லி : மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, நடிகை ரியா சக்ரவர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை சித்தரிக்கும் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங். இவர், 2020ல் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் சவுமிக் சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரியா சக்ரவர்த்தி, போதை மருந்தை சுஷாந்த் சிங்கிற்கு சப்ளை செய்து வந்துள்ளார். போதை மருந்துக்கான தொகையை ரியா தந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.
இந்த குற்றச்சாட்டை ரியா சக்ரவர்த்தி மறுத்து உள்ளார். அதேசமயம், சுஷாந்த் சிங் போதை மருந்து பயன்படுத்துவார் என அவர் ஒப்புக் கொண்டு உள்ளார். ரியா, சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், ஒரு மாத சிறைத்தண்டனைக்குப் பின் ஜாமினில் வந்துள்ளார்.