வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

புதுடில்லி : மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, நடிகை ரியா சக்ரவர்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை சித்தரிக்கும் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங். இவர், 2020ல் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் சவுமிக் சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரியா சக்ரவர்த்தி, போதை மருந்தை சுஷாந்த் சிங்கிற்கு சப்ளை செய்து வந்துள்ளார். போதை மருந்துக்கான தொகையை ரியா தந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.
இந்த குற்றச்சாட்டை ரியா சக்ரவர்த்தி மறுத்து உள்ளார். அதேசமயம், சுஷாந்த் சிங் போதை மருந்து பயன்படுத்துவார் என அவர் ஒப்புக் கொண்டு உள்ளார். ரியா, சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், ஒரு மாத சிறைத்தண்டனைக்குப் பின் ஜாமினில் வந்துள்ளார்.