திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹார்மனி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக சேவையாற்றி வருகிறவர்களுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகையும், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் தூதுவருமான தியா மிர்சா மற்றும் சுற்றுச்சூழல்வியலாளர் அப்ரோஸ் ஷா ஆகியோருக்கு அன்னை தெரசா விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா நடந்தது, மகாராஷ்டிரா மாநில கவர்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த விருதை தியா மிர்சாவுக்கு வழங்கினார். தியா மிர்சா பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வெளிவந்த என் சுவாசக் காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.