சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
பாலிவுட் சினிமாவில் 2010ம் ஆண்டு பாண்ட் பாஜா பாரத் என்ற படத்தில் அறிமுகமானவர் ரன்வீர் சிங். அதையடுத்து 2015 ஆம் ஆண்டு தீபிகா படுகோனே உடன் இணைந்து அவர் நடித்த பஜ்ரவ் மஸ்தானி என்ற படமும், 2019ம் ஆண்டு நடித்த கல்லி பாய் என்ற படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிகை தீபிகாவை திருமணம் செய்துள்ள இவர் படங்களில் பிஸியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு மேகஸினுக்காக நிர்வாணமாக போட்டோ சூட் நடத்தி அதிர்ச்சி தந்துள்ளார் ரன்வீர் சிங். இது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ரன்வீர் கூறுகையில், 'நடிப்பிற்காக நான் இதற்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன், அதில் என் ஆன்மா வெளிப்பட்டது. தற்போதும் ஆயிரம் பேருக்கு முன்னால் என்னால் நிர்வாணமாக இருக்க முடியும், ஆனால் அது அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் அதனால் அதை நான் செய்ய மாட்டேன்' என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கருத்து பதிவிட்டுள்ளனர்.