தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட் சினிமாவில் 2010ம் ஆண்டு பாண்ட் பாஜா பாரத் என்ற படத்தில் அறிமுகமானவர் ரன்வீர் சிங். அதையடுத்து 2015 ஆம் ஆண்டு தீபிகா படுகோனே உடன் இணைந்து அவர் நடித்த பஜ்ரவ் மஸ்தானி என்ற படமும், 2019ம் ஆண்டு நடித்த கல்லி பாய் என்ற படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிகை தீபிகாவை திருமணம் செய்துள்ள இவர் படங்களில் பிஸியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு மேகஸினுக்காக நிர்வாணமாக போட்டோ சூட் நடத்தி அதிர்ச்சி தந்துள்ளார் ரன்வீர் சிங். இது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ரன்வீர் கூறுகையில், 'நடிப்பிற்காக நான் இதற்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன், அதில் என் ஆன்மா வெளிப்பட்டது. தற்போதும் ஆயிரம் பேருக்கு முன்னால் என்னால் நிர்வாணமாக இருக்க முடியும், ஆனால் அது அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் அதனால் அதை நான் செய்ய மாட்டேன்' என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கருத்து பதிவிட்டுள்ளனர்.




