ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

பாலிவு நடிகர் ரன்வீர் சிங் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்தார். இந்த படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனே கணவரின் நிர்வாணத்தை புகழ்ந்தார், ஆனால் மற்றவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். வட நாட்டில் பல இடங்களில் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போராட்டமும் நடந்த வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் அளித்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங்கின் புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு, ரன்வீர் சிங்குக்காக பொதுமக்களிடம் ஆடைகள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.
இந்தூரை சேர்ந்த இன்னொரு தொண்டு நிறுவனமான'நேகி கீ திவார்' ரன்வீர் சிங்குக்குக் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பழைய ஆடைகளைச் சேகரித்து வருகிறது. ஆடைகள் சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது. பல இடங்களில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத ஆடைகளை போடுவதற்கு டொனேஷன் பாக்சையும் திறந்திருக்கிறது.