இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு வருடத்தில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர், தொடர்ச்சியாக அதிகப் படங்களில் நடிக்கும் நடிகர் எனப் பெயரெடுத்தவர். வித்தியாசமான கதைகளில் நடித்து விமர்சகர்களாலும் பாராட்டப்படுபவர்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வசூலைக் குவிக்கவில்லை. “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன்” என தியேட்டர்களில் வெளியான அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் தற்போது 'ராம் சேது' படமும் இடம் பெற்றுள்ளது. ராமர் பாலத்தைப் பற்றிய படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங் மிகச் சுமாராக இருந்ததால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
தொடர்ந்து நான்காவது தோல்வி என்பது அக்ஷய் குமாரின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான தடைக் கற்கள்தான். இருப்பினும் அவரது கைவசம் நான்கு படங்கள் உள்ளன. அந்தப் படங்களின் மூலம் அவர் மீண்டும் தனது பழைய வெற்றியைப் பெறுவார் என பாலிவுட்டினர் கருதுகிறார்கள்.