ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா, தேசப்பற்று மிக்க நடிகையும்கூட. அடிக்கடி அவர் கூறும் சமூக மற்றும் அரசியல் கருத்துகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய சக்தியாக மாறுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நான் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று கங்கனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 2024 தேர்தலில் போட்டியிட நான் தயார். என் எண்ணங்களோடு ஒத்துப்போகிற பாஜக சீட் கொடுத்தால் அதற்கு நான் தயார். ஏனெனில் அனைத்து வகையான பங்கேற்பையும் விரும்புபவள் நான். கடினமாக உழைக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். இமாச்சல பிரதேச மக்கள் விரும்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி, கங்கனாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க முன்வந்தபோது அதனை கங்கனா மறுத்தது குறிப்பிடத்தக்கது. அவர் மக்கள் மூலம் பார்லிமென்ட் செல்லவே விரும்புவதாக கூறுகிறார்கள்.