தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'தலைவி' படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் அடுத்து மாதவன், கங்கனா ரணாவத் இருவரையும் முதன்மை கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே ஹிந்தியில் மாதவனும், கங்கனாவும் இணைந்து தனு வெட்ஸ் மனு படத்தில் நடித்துள்ளனர். இரண்டாவது முறையாக இந்த படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக்கியுள்ளனர். இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ' சர்க்கிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளனர். இதனால் இந்த படத்தை இவ்வருட டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.