வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள திரையுலகில் பிஸியான நடிகராக நடித்துவரும் பிரித்விராஜ், வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வருகிறார். அதே சமயம் மலையாள திரையுலகோடு தனது எல்லையை சுருக்கி கொள்ளாமல் தென்னிந்திய மொழிகளிலும் அதைத் தாண்டி பாலிவுட்டிலும் நல்ல படங்கள் தேடி வரும்போது நடிக்கிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்..
இந்த நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மீண்டும் தற்போது படே மியான் சோட்டா மியான் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அக்சய் குமார், டைகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த கிரேஸி ஆக்சன் ரோலர்கோஸ்டர் (பிரித்விராஜ்) வரவால் இந்த படே மியான் குடும்பம் இன்னும் பெரிதாகி உள்ளது என அவரை வரவேற்றுள்ளார் நடிகர் அக்சய் குமார்.