ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக். கடந்த 2021ல் மும்பையில் உள்ள கப்பல் ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன் பிறகு இந்த விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.
ஆரியன்கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாக போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் புதிதாக மதுபான பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் சினிமா மற்றும் டிவி நடிகர் நடிகைகளுக்கு மும்பையில் அவர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது பல நடிகைகளுடன் ஆரியன்கான் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதைப்பார்த்து ஏற்கனவே போதை பொருள் வழக்கில் சிக்கிய ஆரியன்கானுக்கு இதுபோன்ற சரக்கு பிசினஸ் தேவையா? என்கிற கேள்விகளும் சோசியல் மீடியாவில் அவரை நோக்கி எழுந்து கொண்டிருக்கிறது.