அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
பெங்களூரை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மும்பை திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தாக அவரது காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்ணாண்டசும் விசாரணை வளையத்திற்குள் உள்ளார். இநத நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான ஜாக்குலினுக்கு சிறையில் இருந்தபடியே ஈஸ்டர் வாழ்த்து சொல்லி காதல் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் சுகேஷ்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என் செல்லக் குழந்தை ஜாக்குலின். குட்டி முயலே... எனது பேபியே... உனக்கு எனது இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள். உனக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று என தெரியும். இந்த பூமியில் உன்னை விடவும் அழகி யாருமே கிடையாது. ஐ லவ் யூ பேபி.
இந்த நேரமும் கடந்து போகும். மீண்டும் நல்ல நாட்கள் வரும். ஒவ்வொரு கணமும் உன்னை மிஸ் செய்கிறேன். ஒவ்வொரு கணமும் நீயும் என்னை மிஸ் செய்வாய் என்று எனக்கு தெரியும். அடுத்த ஆண்டு ஈஸ்டர் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். என்று எழுதியுள்ளார்.