இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வீரம். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது சல்மான்கான் நடித்துள்ளார். கிசி கா பாய் கிசி கி ஜான் என்று அந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ, வெங்கடேஷ், விஜயேந்தர் சிங் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதியான நேற்று இரவு 9 மணிக்கு மும்பையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறிக்கை ஒரு மிரட்டல் போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தன்னை ஜோத்புரி சேர்ந்த கவுரசத் ராக்கி பாய் என்று கூறிக்கொண்டு ஏப்ரல் 30ம் தேதி அன்று சல்மான்கானை நான் கொன்று விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.