நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ், தான் நடித்த சாஹோ என்கிற ஒரு படத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறியது. இதனால் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் தற்போது பிரசாந்த் நீல் டைரக்சனில் சலார், ஓம் ராவத் டைரக்ஷனில் ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் கே மற்றும் இயக்குனர் மாருதி டைரக்ஷனில் ஒரு படம் என அவர் நடிப்பில் நான்கு படங்கள் தயாராகி வருகின்றன.
இதில் முதலில் வெளியாக இருக்கும் படம் ஆதிபுருஷ் தான். இதற்குமுன் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகின. இருந்தாலும் வரும் ஜூன் மாதம் இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் ஓம் ராவத். ஆனால் இன்னொரு பக்கம் புராஜெக்ட் கே படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பு குறித்த வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இதனால் பிரபாஸ் ரசிகர்களின் கவனம் மட்டுமல்லாது மீடியாக்களின் கவனம் கூட அந்த படத்தின் பக்கம் தான் திரும்புகிறது என்கிற வருத்தத்தில் இருக்கிறார் இயக்குனர் ஓம் ராவத்.
இதற்கு முன்பு இப்படித்தான் சலார் படத்தின் அப்டேட்டுகள் அதிகம் வெளியானபோது அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலிடம் ஆதிபுருஷ் படத்தை ஹைலைட் செய்ய உதவுங்கள் என கேட்டுக்கொண்டதால் சமீப காலமாக சலார் பட அப்டேட்டுகள் வருவது குறைந்துவிட்டது. தற்போது புராஜெக்ட் குழுவினரிடம் இது போன்ற ஒரு கோரிக்கையை வைக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் ஓம் ராவத்.