சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான் கடந்த 2021ம் ஆண்டு, மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கூடிய விருந்து நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது அவர் ஷாருக்கான் மகன் என்பது போலீசுக்கு தெரியாது. பின்னர்தான் தெரியும். அதற்குள் தகவல் வெளியாகி விட்டது. இதனால் ஆர்யன் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன்கான் குற்றமற்றவர் என கூறப்பட்டுள்ளது. அதாவது ஆர்யான் கான் விருந்தில் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டது. இதனால் ஆர்யன் கானை கோர்ட் இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கானை விடுவிக்க விசாரணை அதிகாரி சமீர்வான்கடே தலைமையிலான விசாரணை குழு மொத்தமாக 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் அதன் முதல் கட்டமாக 50 லட்சம் வழங்கப்பட்டதாகவும் தற்போது சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. இதை தொடர்ந்து ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். சமீர் வான்கடே தற்போது சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.