தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆர்யன் கானை விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 25 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அப்போது போதை பொருள் தடுப்பு அதிகாரியாக இருந்த சமீர்வான்கடே உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
தற்போது சென்னையில் வரி செலுத்துவோர் சேவை பிரிவு தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் சமீர்வான்கடே சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் இரண்டு நாட்களாக தினமும் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும் முன் அவரை பேட்டி எடுக்க மீடியாக்கள் முயன்றன அப்போது அவர் “நீதிதுறையின் மீது நம்பிக்கை உள்ளது” என்று மட்டும் கூறிச் சென்றார். முன்னதாக அவர் பிரபாதேவியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.




