தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட் நடிகர்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதை போல நடிகைகள் சொகுசு வீடுகளை வாங்குவதில் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தீபிகா படுகோனே இணைந்துள்ளார். மும்பை பாந்த்ரா கடற்கரைக்கு அருகில் உள்ள பிரமாண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 16வது தளத்தில் உள்ள 4 வீடுகளையும் வாங்கி உள்ளார். இதன் மூலம் 16வது தளம் முழுக்கவே அவரது சொந்தமாகிறது. 4 வீடுகளும் தனித்தனியாக இருந்தாலும் தற்போது எல்லா வீடுகளையும் ஒரே வீடாக அவர் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடுகளின் மொத்த விலை ரூ.119 கோடி என்கிறார்கள்.
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிகளுக்கு மகாராஷ்டிராவில் மாநிலம் அலிபாக் நகரில் அரண்மனை போன்ற பங்களாக உள்ளது. சினிமாவில் நடிக்க வசதியாக மும்பை பாந்தாரா பகுதியில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இப்போது அந்த பகுதியிலேயே சொந்த வீடு வாங்கி விட்டார். இதுதவிர பாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகாவிற்கு அமெரிக்காவிலும் சொந்த வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. தீபிகா தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 15 கோடி வாங்கி வந்த அவர் பதான் படத்திற்கு பிறகு 25 கோடியாக உயர்த்தி விட்டார் என்கிறார்கள்.




