2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
விஜய் தேவரகொண்டாவை முன்னணி ஹீரோவாக உயர்த்திய 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன்பிறகு சாகித் கபூர் நடிப்பில் அதன் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கையும் இயக்கி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டிலேயே தனது அடுத்த படத்தையும் இயக்கியுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா. அனிமல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஏற்கனவே குட்பை மற்றும் மிஷன் மஞ்சு என இரண்டு இந்தி படங்களில் ராஷ்மிகா நடித்திருந்தும் அவருக்கு அவை பெரிய அளவில் பெயர் பெற்று தரவில்லை. அதனால் இந்த அனிமல் திரைப்படத்தை பெரிதும் நம்பியுள்ளார் ராஷ்மிகா. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
ரன்பீர் உள்ளிட்ட படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா இந்த படத்தில் ரன்வீர் கபூரின் கதாபாத்திரம் ஒரு பாம் ஆக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ரன்பீர் கபூருடன் பழகியபோது தான், கடவுள் அவரை கொஞ்சம் அதிக நேரம் எடுத்து படைத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்