படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தை பொறுத்தவரை எப்போதுமே நெப்போடிசத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். நெப்போடிசத்தை ஊக்குவிக்கிறார் என்பதாலேயே பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹருக்கு எதிராகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருபவர். இந்த நிலையில் கரண் ஜோஹர் இயக்கத்தில் ராக்கி அவுர் ராணி கி கஹானி என்ற படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. போதாக்குறைக்கு கங்கனா தன் எதிரியாக கருதும் ஆலியா பட் தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தையும் கரண் ஜோஹரையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் கங்கனா. குறிப்பாக 90களில் கரண் ஜோஹர் தான் எடுத்த படங்களின் கலவையாக இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி அப்டேட் ஆகாமல் இன்னும் அதே பழைய பாணியிலான செட்டுகள், காட்சிகள் என பழைய ஆளாகவே இருக்கிறார் என்றும் கூறியுள்ள கங்கனா, "கரண் ஜோஹர் நீங்கள் பேசாமல் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி ரிட்டயர்மென்ட் வாங்கி கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தை எல்லாம் தயாரிப்பதற்கு இவ்வளவு பெரிய தொகையை யார் கொடுத்தார்களோ தெரியவில்லை. நல்ல படம் தயாரிக்கும் படைப்பாளிகள் இப்படி பணம் கொடுப்பவர்கள் கிடைக்காமல் அலைகிறார்கள் என்றும் கூறியுள்ளாா் கங்கனா.
படத்தின் ஹீரோ ரன்வீர் சிங்கை பற்றி கூறும்போது, தயவு செய்து இது போன்ற படங்களில் நடித்து உங்கள் பெயரை எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த படத்தில் உங்களது காஸ்டியூம், கேரக்டர் எல்லாவற்றையும் பார்க்கும்போது பபூன் தான் ஞாபகத்திற்கு வருகிறார்" என்று அவரையும் தன் பங்கிற்கு விமர்சித்துள்ளார்.




