ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். அவர் கனடா நாட்டின் குடியுரிமையை கடந்த 2000ம் ஆண்டில் பெற்றார். அதற்குப் பிறகு இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அவரை அக்ஷய்குமார் என அழைத்ததை விட கனடியன் குமார் என்றுதான் ரசிகர்கள் அதிகமாகக் கிண்டலடித்தார்கள். இந்நிலையில் தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாக அக்ஷய்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“இதயமும், குடியுரிமையும் இந்தியன்… இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்,” எனக் குறிப்பிட்டு இந்தியக் குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழையும் பதிவிட்டுளளார்.
தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'ஓஎம்ஜி 2' சுமாரான வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.