இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ்குந்த்ரா. பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்தார். திடீரென ராஜ்குந்த்ரா மீது பயங்கரமான குற்றச்சாட்டு கிளம்பியது. மாடல் நடிகைகளை நிர்வாண படங்களில் நடிக்க வைத்து வீடியோ படம் எடுத்து வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக எழுந்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இது திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன் பிறகு அவர் வெளி உலகத்தில் நடமாடவில்லை. இப்போது திடீரென என் கதையை சினிமாவாக எடுத்துள்ளேன். எனது வலியை பாருங்கள் என்று கூறியுள்ளார். 'யூடி 69' என்ற பெயரில் தயாராகி உள்ள இந்த படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். நீண்டநாட்களுக்கு பிறகு மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்குந்த்ரா இதனை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது “என் மீதான நிர்வாண பட வழக்கு குடும்பத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கைதான பிறகு சமூக வலைதளத்தில் என்னை கொடூரமாக டிரோல் செய்தார்கள். இது எனக்கு பெரிய அவமானமாக இருந்தது. எனது வாழ்க்கை ஒரு குழப்பமான நிலையில் அர்த்தமற்றதாக மாறிவிட்டது. நான் அனுபவித்த வேதனையின் ஒரு பகுதியை மட்டுமே இந்த படத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது'' என்றார்.