தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. விளம்பர பரபரப்புக்காக அவ்வப்போது எதையாவது செய்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செய்தது எல்லை மீறி தற்போது அவரை சிக்கலில் மாட்டி உள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பில் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பி இறப்பு நாடகம் ஆடினார். விழிப்புணர்வுக்காகவே இப்படி செய்தேன் என்றார்.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். கோல்கட்டாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.




