தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

டில்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் உள்ளிட்ட பல வழக்குகளில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் கிடைத்த பணத்தில் சுகேஷின் காதலியும், பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு 10 கோடி வரை கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், சிறைக்குள் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு அவ்வப்போது சுகேஷ் காதல் கடிதங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஜாக்குலினும் “நான் அவரோடு நெருக்கமாக இருந்தது உண்மைதான். அவர் மோசடி பேர்வழி என்பது தெரியாது. அவரிடம் பரிசு பொருட்கள்தான் வாங்கி இருக்கிறேன் பணம் வாங்கவில்லை” என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு ஜாக்குலின் ஒரு புகார் மெயில் அனுப்பி உள்ளார். அதில், “சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் என்னை மிரட்டுகிறார். கோர்ட்டில் உண்மையை சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக என்னை மிரட்டும் சுகேஷூக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அதோடு அவர் எழுதும் கடிதங்கள், எனது தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கிறது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.




