5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
ஒரு காலத்தில் இந்திய கால்பந்து அணி சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது. 1952 முதல் 1962 வரையில் அந்த அணிக்கு கோச் ஆகப் பணிபுரிந்தவர் சையத் அப்துல் ரகீம். அவரது பயோபிக் படமாக 'மைதான்' படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளிவந்தது.
அமித் ஷர்மா இயக்கத்தில், அஜய் தேவ்கன், பிரியாமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக போனி கபூர் இப்படம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“நாங்கள் தேர்வு செய்த கதை சிறப்பான ஒன்று. அஜய் தேவ்கன் மிகவும் சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், ரசிகர்கள் என்ன மாதிரியான படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை கணிக்கத் தவறிவிட்டோம். இப்போதெல்லாம் 'ஆர்ஆர்ஆர், ஜவான், பதான்” போன்ற படங்களையே ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
கமர்ஷியல் படங்கள் நல்ல படங்களின் வருகையைக் கூட தடுமாற வைத்துவிடுகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரான 'மைதான்' படம் 50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்கிறார்கள்.