தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு காலத்தில் இந்திய கால்பந்து அணி சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது. 1952 முதல் 1962 வரையில் அந்த அணிக்கு கோச் ஆகப் பணிபுரிந்தவர் சையத் அப்துல் ரகீம். அவரது பயோபிக் படமாக 'மைதான்' படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளிவந்தது.
அமித் ஷர்மா இயக்கத்தில், அஜய் தேவ்கன், பிரியாமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக போனி கபூர் இப்படம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“நாங்கள் தேர்வு செய்த கதை சிறப்பான ஒன்று. அஜய் தேவ்கன் மிகவும் சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், ரசிகர்கள் என்ன மாதிரியான படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை கணிக்கத் தவறிவிட்டோம். இப்போதெல்லாம் 'ஆர்ஆர்ஆர், ஜவான், பதான்” போன்ற படங்களையே ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
கமர்ஷியல் படங்கள் நல்ல படங்களின் வருகையைக் கூட தடுமாற வைத்துவிடுகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரான 'மைதான்' படம் 50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்கிறார்கள்.




