தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டா அருகே சர்வதேச தரத்தில் 1000 ஏக்கரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் ஏற்கெனவே ஆரம்பமாகின. அந்த நகரை நிர்மாணிப்பதற்கான கடைசி கட்ட போட்டியில் நால்வர் இருந்தனர்..
பிரபல ஆடியோ கம்பெனி நிறுவனமான டி சீரிஸ், அக்ஷய்குமார் பங்குதாரராக இருக்கும் சூப்பர்சானிக் டெக்னோபில்ட் என்ற நிறுவனம், போனி கபூர் பங்குதாரராக இருக்கும் பேவியூ புராஜக்ட்ஸ், பிரபல தயாரிப்பாளர் கேசி பொக்காடிய பங்குதாரராக இருக்கும் 4 லயன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை அந்த போட்டியில் இருந்தன. அந்நிறுவனங்கள் அவர்களது திட்டங்களைப் பற்றி உ.பி அரசு அதிகாரிகளிடம் விளக்கியுள்ளது. டெண்டரில் போனி கபூர் சார்ந்த நிறுவனம் வெற்றி பெற்றது.
இந்த பிலிம் சிட்டி யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே செக்டர் 21 மற்றும் நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைய உள்ளது. திரைப்படப் பல்கலைக் கழகம், சினிமா மியூசியம், ஹெலிபேட் உள்ளிட்ட பல வசதிகள் அங்கு வர உள்ளது. பிபிபி மாடலில் உருவாக உள்ள இந்தத் திரைப்பட நகரத்தை அமைக்க போனி கபூர் பங்குதாரராக இருக்கும் பே வியு புராஜக்ட் நிறுவனம் அதிக வருவாய் பங்குத் தொகையைக் காட்டியதால் டெண்டரைக் கைப்பற்றியுள்ளது.




