தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன்(49) கடந்த 1ம் தேதி நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தார். மும்பையின் கார்ட்டர் சாலை பகுதி அருகே கார் வந்த போது, சாலையை கடக்க முயன்ற மூன்று பெண்கள் மீது மோதியது. இதில், அந்தப் பெண்கள் காயம் அடைந்தனர்.
காரை ஓட்டிய டிரைவர் காரில் இருந்து இறங்கி வந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். மேலும் அவர், அவர்களை பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீணா டாண்டனும், டிரைவருடன் சேர்ந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ளூர் மக்கள் திரண்டனர். இந்த சம்பவத்தை, அவர்களில் சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். கோபத்தில், உள்ளூர் மக்கள் சிலர் நடிகை ரவீணாவை தாக்கினர்.
உடனே, 'தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்; என்னை தள்ளாதீர்கள்' என, அவர் கெஞ்சினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.