தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ரத்தா கபூர். வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள். ஏக் வில்லன், ஏபிசிடி, பாகி, ராக் ஆன் 2, ஸ்ட்ரீட் டான்சர், பகேடியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார்.
புனேயில் உள்ள ஒரு ஷோரூம் திறப்பு விழாவுக்கு ஸ்ரத்தா கபூர் சென்றார். இதற்கு அவர் கணிசமான தொகை சம்பளமாக பெற்றிருந்தார். திறப்பு விழாவுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு அவர் சென்றார். அங்கு பாதுகாப்புக்கு 2 போலீசார் மட்டுமே நின்றிருந்தனர். இதனால் திடீரென அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உள்ளே புகுந்தனர்.
கூட்டத்துடன் புகுந்த ரசிகர்கள் பலர் ஸ்ரத்தாவை கட்டிபிடித்து செல்பி எடுக்க முண்டியடித்தனர். சிலர் அவரை கண்ட இடத்தில் தொட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரத்தா தனது உதவியாளர்களையும், போலீசையும் உதவிக்கு அழைத்தார். அவர்களோடு பவுன்சர்களும் வந்து சேர எல்லோருமாக சேர்ந்து ஸ்ரத்தாவை திறப்பு விழா பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விழா முடிந்தும் கூடுதல் போலீசார், கூடுதல் பவுன்சர்கள் வந்து அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் விழா ஏற்பாட்டாளர்கள் இதற்காக வருத்தம் தெரிவித்தனர். இந்த வீடியோவை தற்போது ஸ்ரத்தா தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.




