தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட்டின் டாப் வசூல் நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். அவருடைய மகன் ஆர்யன் கான் தற்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். சமீபத்தில் தெற்கு டில்லி பகுதியில் உள்ள பன்ச்ஷீல் பார்க் என்ற இடத்தில் ஆர்யன் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவற்றின் மதிப்பு 37 கோடி ரூபாயாம்.
அந்த இடத்தில்தான் ஆர்யனின் பெற்றோர் ஷாரூக்கான், கவுரி ஆகியோர் ஒரு காலத்தில் வசித்துள்ளார்கள். அந்த இடத்தில் ஏற்கெனவே அவர்களுக்கு 27 ஆயிரம் அடி சதுர பரப்பில் வில்லா வீடு ஒன்றும் உள்ளதாம். 2001ல் சுமார் 13 கோடி ரூபாய்க்கு அந்த வீட்டை வாங்கியுள்ளார்கள்.
பெற்றோர் வசித்த இடத்தில் தனக்கும் வீடு வேண்டும் என்பதற்காக ஆர்யன் அந்த இடத்தை வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். கடந்த மே மாதம் 2024ல் பத்திரப் பதிவு நடந்துள்ளதாகவும், அதற்கான கட்டணமாக 2.64 கோடி செலுத்தியுள்ளார் ஆர்யன் என்றும் செய்திகள் வந்துள்ளன.
ஷாரூக்கான், கவுரி இருவரும் டில்லியை பூர்வீகமாகக் கொண்டவர்கள். டீன் ஏஜ் வயதிலேயே இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஷாரூக், இந்து மதத்தைச் சேர்ந்த கவுரி இருவரும் பல எதிர்ப்புகளுக்கிடையே திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது இந்திய சினிமாவின் டாப் தம்பதிகளில் ஒருவராக உள்ளனர்.




