'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

புதிய படங்களின் வெளியீடுகளில் தேசிய அளவில் முக்கியமான ஒரு தினம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15. இந்த வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்கள் வந்தன.
ஹிந்தியில், அக்ஷய்குமார் நடித்த 'கேல் கேல் மெய்ன்', ஜான்ஆபிரகாம் நடித்த 'வேதா', ராஜ்குமார் ராவ் நடித்த 'ஸ்த்ரீ 2' ஆகிய படங்களும், தமிழில் விக்ரம் நடித்த 'தங்கலான்', அருள்நிதி நடித்த 'டிமான்ட்டி காலனி 2', கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' ஆகிய படங்களும், தெலுங்கில் ரவி தேஜா நடித்த 'மிஸ்டர் பச்சன்', ராம் பொத்தினேனி நடித்த 'டபுள் ஐ ஸ்மார்ட்', மலையாளத்தில் பாசில் ஜோசப் நடித்த 'நுணகுழி', சிஜு சன்னி, அமித் மோகன் நடித்த 'வாழ - பயோபிக் ஆப் எ பில்லியன் பாய்ஸ்', ரதீஷ் சுந்தர் நடித்த 'மாவோயிஸ்ட்' ஆகிய படங்களும் வெளிவந்தன.
அதிக வசூலைக் குவிக்கப் போட்டி போடும் படங்கள் என்றால் ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களைச் சொல்லலாம். அவற்றில் நேற்றைய முதல் நாள் வசூலில் மற்ற படங்களைக் காட்டிலும் ஹிந்திப் படமான 'ஸ்திரீ 2' படம் இந்தியாவில் மட்டும் 76 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளது.
இதுவரை வெளிவந்த ஹிந்தி உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்களில் இது முதல்நாள் வசூலில் வரலாற்று சாதனை என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




